புதிதாக திருமணமான பெண்ணை 7 பேர் சேர்ந்து நாசமாக்கிய கொடூரம்.. அஸ்ஸாமில்

Subscribe to Oneindia Tamil

கம்ரூப்: அஸ்ஸாம் மாநிலத்தில் புதிதாக திருமணம் ஆன பெண் 7 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் பக்சா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. அவர் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கெகேனிகுச்சி பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு நேற்று மாலை சென்றார். அவருடன் அவரது கணவரும் சென்றார்.

Woman gang raped, husband beaten by 7 person, three arrested

கெகேனிகுச்சியில் வந்திறங்கிய அவரது கணவரை 7 பேர் சேர்ந்து அடித்து நொறுக்கினர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு வைத்து அவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திலக் தாஸ், நரேஷ் தாஸ் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் பங்கஜ் தாஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சோன்மோனி தாஸ், பிரபாத் தாஸ், சதீஷ் தாஸ், தீபக் தாஸ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+