சக ஊழியரின் மனைவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் மீது போலீசில் புகார்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கணவருடன் வேலை பார்க்கும் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

உத்திரப்பிரதேசம், ராம்பூரில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கணேஷ் ( பெயர் மாற்றப் பட்டுள்ளது ). இவருடன் அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் பாபுலால் என்ற ஆசிரியர், கணேஷின் மனைவிக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணேஷின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து தலைமறைவாக உள்ள பாபுலாலைப் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications