Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

29 வருஷமாக தொல்லை கொடுத்த உயர் அதிகாரி.. பேஸ்புக்கில் கொட்டித் தீர்த்த பெண் ஐபிஎஸ் அதிகாரி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடுமுழுவதுமே காவல்துறை உயரதிகாரிகளுக்கும், பெண் அதிகாரிகளுக்கும் இடையே கசப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது. இப்படி உயரதிகாரி ஒருவரால் 29 ஆண்டுகளாக தொந்தரவுக்கு ஆளாகி வருவதாக பெண் காவல்துறை உயரதிகாரி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொதுமக்களை காக்க வேண்டிய காவல்துறையிலேயே சில கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் மட்டுமே இந்த கறுப்பு ஆடுகளை எதிர்கொண்டு தாக்கு பிடிக்கின்றனர். நேர்மையாக இருக்கும் சிலரோ கறுப்பு ஆடுகளின் டார்ச்சரை தாங்க முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

Woman IPS officer says fellow ADGP harassing her for 29 years

தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடுமுழுவதுமே காவல்துறை உயரதிகாரிகளுக்கும், பெண் அதிகாரிகளுக்கும் இடையே கசப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது. இப்படி உயரதிகாரி ஒருவரால் 29 ஆண்டுகளாக தொந்தரவுக்கு ஆளாகி வருவதாக பெண் காவல்துறை உயரதிகாரி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உயரதிகாரியின் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்துள்ள பெண் காவல்துறை அதிகாரியின் பெயர் ஸ்ரீலேகா. கேரளா மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர்தான் தனது உயரதிகாரியான கேரள மாநிலத்தின் போக்குவரத்து ஆணையர் டோமின் தச்சங்கரி மேல் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலேகா,55 , தற்போது மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக உள்ளார். இவர், தனது பேஸ்புக் பக்கத்தில், கடந்த 1987-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கு நான் பயிற்சி பெற்ற காலத்தில் இருந்தே தச்சங்கரி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவரது தொல்லைகளைக் கடந்த 29 ஆண்டுகளாகத் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஆணையராக நான் பதவி வகித்த காலத்தில், தனியார் பள்ளிப் பேருந்து ஒன்றுக்கு உரிமம் வழங்கியபோது நான் லஞ்சம் வாங்கியதாக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இது, என்னை வழக்கில் சிக்கவைப்பதற்காக, தச்சங்கரி தீட்டியிருக்கும் சதித் திட்டமாகும். அதே நேரத்தில், அரசுக்கு எதிராகவோ, நீதிமன்றத்துக்கு எதிராகவோ அல்லது காவல் துறைக்கு எதிராகவோ எதுவும் நான் கூறவில்லை" என்றும் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தச்சங்கரி, "யாருக்கு யார் தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை துறையில் உள்ள அனைவரும் அறிவார்கள்; ஸ்ரீலேகாவுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன்'' என்று பதிலளித்துள்ளார்.

Kerala IPS officer Sreelekha alleges harassment by fellow ADGPThiruvananthapuram: ADGP (State Crimes Records Bureau) R...

Posted by JKLIX on Monday, February 1, 2016

காவல்துறை உயரதிகாரிகளிடையே நடக்கும் மல்லுக்கட்டு மலையாள தேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+