உத்தர பிரதேசத்தில் பெண் பத்திரிக்கையாளர் பிணமாகக் கண்டுபிடிப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மஹாகன் அபார்ட்மென்டில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தங்கி இருந்தார். திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு அபார்ட்மென்டின் பேஸ்மென்டில் அவர் பிணமாகக் கிடந்ததை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்தனர். உடனே அவரை அவர்கள் மேக்ஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்த பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போதைக்கு இது குறித்து எதுவும் கூற முடியாது என்று போலீஸ் அதிகாரி தர்மேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications