”ஃபுல்” போதையில் கார் கதவைச் சாத்திக் கொண்டு போலீசாரிடம் தகராறு செய்த மும்பைப் பெண்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் குடிபோதையில் காரை ஓட்டிசென்ற இளம்பெண் ஒருவர் போலீஸ் சோதனையின் போது காரின் கதவை பூட்டிக்கொண்டு தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநில மும்பையில் இளம்பெண்கள் குடித்துவிட்டு இரவு கார் ஓட்டும் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. போலீசார் குடித்துவிட்டு கார் ஓட்டுபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நேற்று இரவு இளம்பெண் ஒருவர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டிவந்து உள்ளார் என்று கூறப்படுகிறது. அப்போது போலீசார் காரை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

சோதனை பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதும், இளம்பெண் காரின் கதவை உள்ளே பூட்டிக் கொண்டார். அதுபோக அதிக சத்தத்துடன் பாடலைகள் உள்ளே கேட்டு டான்ஸ் ஆடிஉள்ளார்.

கிட்டதட்ட இரண்டு மணிநேரம் போராடியும் இளம்பெண் காரை திறக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து உள்ளனர்.

உடனடியாக இளம்பெண் ஓட தொடங்கிவிட்டார். அவரை விரட்டிச் சென்று போலீஸார் பிடித்து பின்னர் கைது செய்தனர். உயர் அதிகாரிKளிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்தபின்னர், அபராதம் விதித்து பின்னர் சொந்த ஜாமீனழில் விடுவித்தனர்.

மும்பையில் சமீபத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் மது போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். இதில் இரண்டு பேர் பலியானார்கள். இந்த விபத்தை தொடர்ந்து, குடித்து விட்டு கார் ஓட்டுபவர்களை பிடிக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+