அண்ணன் - தம்பியை திருமணம் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டா ஆடிப்போயிடுவீங்க.. அடடா
சிம்லா: இப்போது சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமா? ஆம் முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் ஊரைகூட்டி மேளதாளங்கள் முழங்க சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளனர். இந்த சம்பவம் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
கணவர் இருக்கும்போது ஒரு பெண் 2 ஆணையோ, மனைவி இருக்கும்போது ஒரு ஆண் 2 பெண்ணையோ திருமணம் செய்வது நம் நாட்டின் சட்டப்படி குற்றமாகும். இதுபற்றி கேட்டதற்கு எங்களுக்கு ஒன்றும் இது புதிது அல்ல.

காலம் காலமாக எங்கள் கிராமத்தில் இந்த வழக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்கின்றனர் அந்த மக்கள். இப்படி சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் வழக்கம் எங்கு உள்ளது? அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிராமார் மாவட்டத்தை ஷில்லை கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் நெகி. இவரது சகோதரர் பெயர் கபில் நெகி. இவர்கள் ஹட்டி பழங்குடியினத்தை சேர்ந்தவர். இங்கு ஒரு பெண்ணை சகோதரர்கள் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. அதன்படி பிரதீப் நெகி - கபில் நெகி சகோதரர்களுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.
இவர்களுக்கும் குன்ஹாட் கிராமத்தை சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு கடந்த 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடந்து முடிந்துள்ளது. சுனிதா சவுகான் என்ற இளம்பெண் பிரதீப் நெகி மற்றும் கபில் நெகி ஆகியோரை கரம் பிடித்தார்.
இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இது விவாதத்தை கிளப்பி உள்ளது. நம் நாட்டில் ஒருவர் 2 திருமணம் அல்லது அதற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் இங்கு பெண் ஒருவர் 2 சகோதரர்களை திருமணம் செய்துள்ளாரே? என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் மணப்பெண் சுனிதா கூறுகையில், ‛‛எனக்கு யாரும் பிரஷர் தரவில்லை. இந்த திருமணம் எனது தேர்வு'' என்று தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் பலதார மணம் சட்டவிரோதமானது என்றாலும் கூட இமாச்சல் பிரதேசம், அண்டை மாநிலமான உத்தரகாண்ட்டில் இன்னும் கூட ஒருவர் 2 திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. சில கிராமத்தில் இந்த நடைமுறை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. தற்போது ஓரளவு மறைந்தாலும் கூட இன்னும் சில கிராமங்களில் நடந்து வருகிறது. இந்த ஹட்டி பழங்குடியினரை எடுத்து கொண்டால் 2 ஆண்களை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. இதன்மூலம் ஒரு கணவருக்கு ஏதாவது சூழ்நிலையில் வந்தால் இன்னொருவர் மூலமாக திருமண உறவு உயிர்ப்புடன் இருக்கும். இது அவர்களின் காலாசாரமாக தொடர்ந்து வருகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications