Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணன் - தம்பியை திருமணம் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டா ஆடிப்போயிடுவீங்க.. அடடா

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இப்போது சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமா? ஆம் முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் ஊரைகூட்டி மேளதாளங்கள் முழங்க சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளனர். இந்த சம்பவம் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

கணவர் இருக்கும்போது ஒரு பெண் 2 ஆணையோ, மனைவி இருக்கும்போது ஒரு ஆண் 2 பெண்ணையோ திருமணம் செய்வது நம் நாட்டின் சட்டப்படி குற்றமாகும். இதுபற்றி கேட்டதற்கு எங்களுக்கு ஒன்றும் இது புதிது அல்ல.

marriage himachal pradesh

காலம் காலமாக எங்கள் கிராமத்தில் இந்த வழக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்கின்றனர் அந்த மக்கள். இப்படி சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் வழக்கம் எங்கு உள்ளது? அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிராமார் மாவட்டத்தை ஷில்லை கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் நெகி. இவரது சகோதரர் பெயர் கபில் நெகி. இவர்கள் ஹட்டி பழங்குடியினத்தை சேர்ந்தவர். இங்கு ஒரு பெண்ணை சகோதரர்கள் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. அதன்படி பிரதீப் நெகி - கபில் நெகி சகோதரர்களுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.

இவர்களுக்கும் குன்ஹாட் கிராமத்தை சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு கடந்த 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடந்து முடிந்துள்ளது. சுனிதா சவுகான் என்ற இளம்பெண் பிரதீப் நெகி மற்றும் கபில் நெகி ஆகியோரை கரம் பிடித்தார்.

இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இது விவாதத்தை கிளப்பி உள்ளது. நம் நாட்டில் ஒருவர் 2 திருமணம் அல்லது அதற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் இங்கு பெண் ஒருவர் 2 சகோதரர்களை திருமணம் செய்துள்ளாரே? என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் மணப்பெண் சுனிதா கூறுகையில், ‛‛எனக்கு யாரும் பிரஷர் தரவில்லை. இந்த திருமணம் எனது தேர்வு'' என்று தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் பலதார மணம் சட்டவிரோதமானது என்றாலும் கூட இமாச்சல் பிரதேசம், அண்டை மாநிலமான உத்தரகாண்ட்டில் இன்னும் கூட ஒருவர் 2 திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. சில கிராமத்தில் இந்த நடைமுறை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. தற்போது ஓரளவு மறைந்தாலும் கூட இன்னும் சில கிராமங்களில் நடந்து வருகிறது. இந்த ஹட்டி பழங்குடியினரை எடுத்து கொண்டால் 2 ஆண்களை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. இதன்மூலம் ஒரு கணவருக்கு ஏதாவது சூழ்நிலையில் வந்தால் இன்னொருவர் மூலமாக திருமண உறவு உயிர்ப்புடன் இருக்கும். இது அவர்களின் காலாசாரமாக தொடர்ந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+