மிசோரம்: பெண்ணை விலங்கு என்று நினைத்து சுட்ட வேட்டைக்காரர்
மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் வேட்டைக்காரர் ஒருவர் பெண்ணை விலங்கு என்று தவறாக நினைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.
மிசோரம் மாநிலம் லங்லீ மாவட்டத்தில் உள்ள ஜொடூஸ்ட்லாங் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்ரியாத்புயா. வேட்டைக்காரர். அவர் லங்லீ மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வேட்டைக்கு சென்றார். அப்போது லாலின் கிராமத்தைச் சேர்ந்த ஜொமுவான்புய்(35) என்ற பெண் காட்டில் பழங்கள் பொறுக்கிக் கொண்டிருந்தார்.
லால் ஜொமுவான்புய்யை வன விலங்கு என்று தவறாக நினைத்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டார். இதில் ஜொமுவான்புய்யின் தலை, இடது தொடை, வயிறு மற்றும் கணுக்காலில் குண்டடிபட்டது. இதையடுத்து அவர் செர்காவ்னில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அய்ஸ்வால் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து லங்கலீ போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications