கணவனையும், கள்ளக் காதலியையும் பிடிக்க 'ஒருநாள் போலீஸ் அதிகாரியாக' மாறிய மனைவி!

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரின் கோட்புந்தர் பகுதியை சேர்ந்தவர் சோனு. கார்மெண்ட்ஸ் தொழிலதிபர். இவரது மனைவி சாய்னா (32). கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடேயே தகராறு இருந்து வந்துள்ளது. சோனு மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததாக சாய்னாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதுதான் இந்த தகராறுகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.
லாட்ஜில் கணவன்
இதனிடையே, சண்டை போட்டுவிட்டு கடந்த சில நாட்களாக சாய்னா தனது தாய் வீட்டில்தான் தங்கியுள்ளார். கணவனுக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தொழில் நிமித்தமாக மும்பை வந்துள்ளதாகவும், அந்தேரியில் ஒரு ஹோட்டல் லாட்ஜில் தங்கி இருப்பதாக கூறினாராம். இதனால் லாட்ஜில் கள்ளக்காதலியுடன்தான் கணவன் இருக்க கூடும் என்ற முடிவிற்கு சாய்னா வந்தார்.
போலீஸ் அதிகாரியாக நடிப்பு
கணவனின் கள்ளக்காதலை கையும் களவுமாக பிடித்துவிட வேண்டும் என்று முடிவுக்கு வந்த சாய்னா, இதற்காக ஒரு பிளான் போட்டுள்ளார். அதாவது, போலீஸ் அதிகாரி போல நடித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் பேசி, ரெய்டு போவது போல லாட்ஜுக்குள் புகுந்துவிட சாய்னா திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று ஹோட்டலுக்கு சென்ற சாய்னா தன்னை ஒரு, துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி) என்று லாட்ஜ் நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்துள்ளார். கூடவே, தனது கணவரின் நிறுவனத்தில் வேலை பார்க்கும், 4 ஆண் ஊழியர்களையும் அழைத்துச் சென்று அவர்களை போலீஸ் கான்ஸ்டபிள்கள் போல நடிக்க செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications