தானேவில் துப்பாக்கி முனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்
Subscribe to Oneindia Tamil
தானே: தானேவில் ரயில் நிலைம் அருகே 29 வயது பெண் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பயாந்தர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையம் எதிரே இருக்கும் இடத்தில் கடந்த 30ம் தேதி 29 வயது பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ஒருவர் அந்த பெண்ணின் தலையில் துப்பாக்கியை வைக்க தீபக் என்பவர் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
அந்த இருவரும் அப்பெண்ணுக்கு தெரிந்தவர்களா அல்லது அவரை வழிமறித்து பலாத்காரம் செய்தார்களா என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications