கெஜ்ரிவால் ஆளும் டெல்லியில் பெண்ணை சீரழித்த பக்கத்துவீட்டுக்காரர்
டெல்லி: டெல்லியில் பெண் ஒருவர் பக்கத்துவீட்டுக்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள நியூ பிரெண்ட்ஸ் காலனியில் வசித்து வருபவர் சோனு. அவர் தனது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணை அடைய நினைத்தார். இதையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து அந்த பெண் தன்னை காத்துக் கொள்ள மாடியில் உள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சோனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் மொத்தம் 3 பேர் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தான் ஆட்சிக்கு வந்தால் டெல்லியை பலாத்காரங்கள் நடக்காத இடமாக மாற்றுவேன் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் முதல்வராகி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடக்கத் தான் செய்கின்றன.












Click it and Unblock the Notifications