நிலத்தகராறில் பெண் தாக்கப்பட்டு, நிர்வாணம்- விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில், நிலத்தகராறு தொடர்பாக பெண் ஒருவர் பொது இடத்தில் நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஜிதன் ராம் மான்ஜி உத்தரவிட்டுள்ளார்.

பீகார் மாநிலம் ஜெகனபாத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நிஜாமுதீன்பூர் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சங்கீதா தேவி (40) என்ற பெண் மீது, நில விவகாரம் காரணமாக சக்தி சிங் என்ற வாலிபரைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு கும்பலாக திரண்டுவந்து சங்கீதா தேவியின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் சங்கீதா தேவியை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து அவரை மோசமாக தாக்கி அவரை நிர்வாணபடுத்தினர்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கு நின்று இருந்த லோக்கல் போலீசார் பார்த்த்க்கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் சங்கீதா தேவியை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பின்னர் படுகாயமடைந்த சங்கீதா தேவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீசாரே சேர்த்துள்ளனர்.

பெண் ஒருவர் பொது இடத்தில் குறிப்பாக தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டிய போலீசார் முன்னிலையில் தாக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை உண்டாக்கியது.

இது தொடர்பாக அம்மாநில பெண்கள் ஆணைய தலைவி அன்ஜூம் ஆரா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் இன்றைய சட்டசபை கூட்டத்திலும் எதிரொலித்தது. எதிர்கட்சிகள் இந்த சமபவத்திற்கு கண்டன குரல் எழுப்பின. இதை தொடர்ந்து பீகார் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி இந்த விவாகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+