ஊர் முன்பு ஆடைகளை அவிழ்த்து, தாக்கப்பட்ட பெண் பாட்னா மருத்துவமனையில் இருந்து மாயம்
பாட்னா: பீகாரில் ஆடைகளை அவிழ்த்து பொது மக்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட பெண் பாட்னா மருத்துவமனையில் இருந்து மாயமாகியுள்ளார்.
பீகார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தில் உள்ள நிஜாமுத்தீன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா தேவி. 40 வயதான அவர் தன்னுடன் நில விவகாரத்தில் தொடர்புடைய 2 ஆண்களை கடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகோரி அருகே இரண்டு ஆண்களின் சடலங்கள் கிடப்பதை கடந்த வியாழக்கிழமை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களை சங்கீதா தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. முன்னதாக புதன்கிழமை இரவு சங்கீதாவின் வீட்டுக்குள் சிலர் புகுந்து அவரை வெளியே இழுத்து வந்தனர். அவரது வீட்டை தாக்கியதுடன் அவரின் ஆடைகளை அவிழ்த்து அவரை ஊர் மக்கள் முன்பு தாக்கினர். இதில் காயம் அடைந்த சங்கீதா பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா இன்று திடீர் என்று மாயம் ஆகியுள்ளார். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட இரண்டு பேரில் ஒருவரின் தந்தை அளித்த புகாரின்பேரில் சங்கீதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சங்கீதாவை மானபங்கப்படுத்தி தாக்கியதற்காக 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications