வன்முறைகளால் வாக்களிக்க தயங்கும் பெண்கள் – பரபர ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் 60 சதவீதம் பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் முக்கிய ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வருவதே இல்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக நாட்டில் நடக்கும் பயங்கரவாத செயல்களின் மீதான பயம்தான் என்று கூறப்படுகின்றது.
இந்த ஆய்வானது 2003 இலிருந்து 2013 வரையிலான பயங்கரவாத செயல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

பெண் வாக்காளார்கள் அதிகம்:
3 நாடுகளிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வந்தாலும், தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

வன்முறைகளால் பயம்:
"கிட்டதட்ட 90 சதவீதம் பெண்கள் பயங்கரவாத செயல்களுக்கு பயந்து கொண்டே அரசியலுக்கு வருவதில்லை" என்று கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான பெண்கள் நல அதிகாரி ரெபேக்கா ரெச்மான் டாவரெஸ்.

குடும்ப முடிவு:
50 சதவீத பெண்களின் தேர்தல் வாக்களிப்பு பற்றிய முடிவுகள் அவர்களில் குடும்பத்தினராலேயே எடுக்கப்படுகின்றன.

மூடிமறைக்கும் கட்சிகள்:
பயங்கரவாதம், பாலியல் வன்முறைகள் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டாலும், அரசியல் கட்சிகள் அவற்றை மூடி மறைக்கவே பார்க்கின்றன.

இளம் வாக்காளர்கள்:
"இளம் வாக்காளார்கள்தான் அதிக அளவிலான சமூக வன்முறைகளில் பாதிக்கப்படுகின்றனர்" சமூகவியல் நிறுவன நிர்வாகி ரஞ்சனா குமாரி கூறியுள்ளார்.

நடவடிக்கை வேண்டும்:
அரசியல் கட்சிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உரிய நடைமுறைகளை கையாளாத வரையில் இந்த சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் பதவியில் பெண்கள்:
மேலும், அரசியலில் பெண்களை அதிக அளவில் உயர் பதவிகளில் ஈடுபடுத்த வேண்டும்.அதனால் மட்டுமே பெண்கள் தைரியமாக தங்களுடைய ஜனநாயகக் கடமையில் ஈடுபட முடியும்.












Click it and Unblock the Notifications