For Daily Alerts
Just In
பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தாலும் மோடி பிரதமராக விட மாட்டோம்.. மமதா
கொல்கத்தா: ஒருவேளை லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தாலும் கூட நரேந்திர மோடியைப் பிரதமராக விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநிலம் ஹப்ரா என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், உங்களுக்கு மெஜாரிட்டி கிடைத்தாலும், மோடியைப் பிரதமராக நான் அனுமதிக்க மாட்டேன்.
ஆனால் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. பாஜகவின் பிரதமர் வேட்பாளரை கையைக் கட்டி சிறைக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே அவர் பிரதமராகி விட்டது போல கனவு கண்டு வருகிறார். அது கனவாகவே போகும் என்றார் மமதா.
Comments
English summary
West Bengal Chief Minister Mamata Banerjee on Monday lashed out at BJP's prime ministerial candidate Narendra Modi at a rally in Habra in North 24 Parganas district of the state, saying the latter wouldn't be allowed to become the prime minister even if he had the majority.
Story first published: Tuesday, May 6, 2014, 17:49 [IST]