மகாராஷ்டிராவில் என்.பி.ஆர் அனுமதிக்கப்படும்.. என்.ஆர்.சி கிடையாது.. உத்தவ் தாக்ரே அறிவிப்பு
சென்னை: மகாராஷ்டிராவில் என்.பி.ஆரை (NPR) செயல்படுத்துவதை தடுக்க மாட்டேன் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். கூட்டணியில் உள்ள, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கும் நிலையிலும் உத்தவ் தாக்ரே இவ்வாறு கூறியுள்ளார்.
சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி வேறுபட்டவை மற்றும் என்.பி.ஆர் வேறுபட்டது. சி.ஏ.ஏ செயல்படுத்தப்பட்டால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. என்.ஆர்.சி மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படுத்தப்படாது என்று தாக்கரே ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சர்ச்சைக்குரிய எதுவும் இல்லாததால் மாநிலத்தில் என்.பி.ஆர் நடக்கும், என்.ஆர்.சி செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன். என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இந்துக்கள் அல்லது முஸ்லிம்களை மட்டுமல்ல, ஆதிவாசிகளையும் பாதிக்கும். என்.பி.ஆர் என்பது, ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும்தான். ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இது நடக்கும். ஆனால் யாரும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை, என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிரா தேர்தலுக்கு பின்னர், சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி முறிந்தது. எனவே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கடந்த நவம்பரில், ஆட்சியை பிடித்துள்ளது சிவசேனா. இதனால்தான், இது பொருந்தாக் கூட்டணிபோல மாறிவிட்டது.
பல கொள்கைகளில் பாஜகவுடன், சிவசேனா ஒத்துப்போகிறது. குறிப்பாக மத ரீதியான விஷயங்களில். எனவே, மகாராஷ்டிராவில் கூட்டணிக்குள் குழப்பம் அதிகரித்தபடி உள்ளது. இருப்பினும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படாது என அவர் கூறியுள்ளது கூட்டணி நிர்பந்தங்களால்தான் என கூறப்படுகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications