டெல்லி: பொம்மை தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி
டெல்லி: டெல்லியில் உள்ள பொம்மை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டெல்லியின் முண்டகா பகுதியில் பொம்மை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. நேற்று மதியம் அத்தொழிற்சாலையில் திடீரென தீ பற்றியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனபோதும் தீவிபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த தீவிபத்தில் சிக்கி 33 வயது தொழிற்சாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘45 தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி இரவு 8.20 மணியளவில் தீயை முழுவதுமாக அணைத்துவிட்டனர். ஆனபோதும் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications