மல்யுத்தம்:'பாலியல் புகார்' பிரிஜ் பூஷணை ஏன் மத்திய பாஜக அரசு பாதுகாக்கிறது? பிரியங்கா சரமாரி கேள்வி
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் புகார் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷணை மத்திய அரசு ஏன் பாதுகாக்கிறது என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரிஜ் பூஷண் உள்ளிட்ட மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் மீது நாட்டுக்கு பெருமை தேடி தந்த மல்யுத்த வீராங்கனைகள் பொதுவெளியில் பகிரங்கமாக பாலியல் அத்துமீறல் புகார்கள் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தங்களுக்கு நீதி கோரி டெல்லி வீதிகளில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது மத்திய அரசு. இந்த கமிட்டி அறிக்கை என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. இதனால் தங்களுக்கு நீதி கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரிஜ் பூஷணுக்கு எதிராக கடுமை காட்டியது. பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஒரு வழக்கு கூட ஏன் பதிவு செய்யவில்லையே என கேள்வி கேட்டது.
இதனால் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிடும் என உறுதி மொழி அளித்தது மத்திய அரசு. நேற்று மாலைக்குள் வழக்கு பதியப்படும் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை பிரிஜ் பூஷண் மீது வழக்கு பதியவில்லை என்றே கூறப்படுகிறது.
அதேநேரத்தில் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது செய்தியாளாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, மத்திய அரசு ஏன் பிரிஜ் பூஷணை பாதுகாக்கிறது என கேள்வி எழுப்பினார்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications