யாகூ நிறுவனத்தின் பெயர் மாற்றம்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
பெங்களூர்: யாகூ நிறுவனம் தனது பெயரை அல்டாபா என மாற்றியுள்ளதோடு, தலைமைச் செயல் அதிகாரியையும் மாற்றியுள்ளது.
ஜிமெயிலுடன் போட்டி போட்டு இமெயில் சேவைகளை வழங்கி வந்தது யாகூ. இதுதவிர டிஜிட்டல் விளம்பரம், மீடியா சொத்துக்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் வெரிசோன் நிறுவனத்திற்கு $4.83 பில்லியன் டாலருக்கு யாகூ தனது முக்கிய வர்த்தகமான, இமெயில், விளம்பரம் மற்றும் மீடியா சொத்துக்களை விற்பனை செய்தது.

அதேநேரம், இந்த விற்பனையை திருத்தவோ, ரத்து செய்யவோ உரிமையுள்ளது என்றும் நிபந்தனையுடன் இந்த டீல் நடந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு டேட்டா திருட்டு நடந்துவிட்டதாக யாகூ தெரிவித்தது. சுமார் 500 மில்லியன் வாடிக்கையாளர்கள் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னொருமுறை ஒரு பில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும் யாகூ கூறியது.
ஆனால் வெரிசான் அதிகாரிகளோ, யாகூ மீது நம்பிக்கையுள்ளதாக கூறியதுடன் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வெரிசானுடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாகூ நிறுவனம் இனி அல்டாபா ஐஎன்சி என்று அழைக்கப்படும். இதுவரை அதன் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த மரிஸ்சா மேயர் பதவி விலக உள்ளார்.
நிறுவனத்தின் 5 இயக்குநர்களும் பதவி விலக உள்ளனர். மற்ற இயக்குநர்கள் அல்டாபா நிறுவனத்தை மேற்பார்வை செய்வார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications