யாகூப் மேமன் தூக்கில் ஆளும் பாஜக அவசரம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் மத்திய அரசும், நீதித்துறையும் வழக்கத்திற்கு மாறான அவரசம் காட்டியுள்ளதாக காங்கிரஸ் குறை கூறியுள்ளது. இதுகுறித்த கருத்தினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்ற தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய குற்றவாளிகள் விவகாரத்திலும், சாதி, மதங்களைக் கடந்து முனைப்பு காட்டப்படும் என நம்புவதாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும் வித்திடும் மத அடிப்படைவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற செய்தியை இது உணர்த்துவதாகவும் திக்விஜய் சிங் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications