தூக்கைத் தடுக்க இறுதி கட்ட முயற்சி..மகாராஷ்ட்ர ஆளுநரிடம் யாகூப் மேமன் மீண்டும் கருணை மனு
மும்பை: மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனையை தவிர்க்க இறுதி கட்ட முயற்சியாக மகாராஷ்ட்ர மாநிலஆளுநரிடம் யாகூப் மேமன் கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.
வரும் 30 ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் இருவரும் பாகிஸ்தானில் பதுங்கியதால் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமன் உள்பட 12 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. யாகூப் மேமனின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து, தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் மேமன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிரான மனுவை கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், தண்டனையைக் குறைக்க கோரி யாகூப் மேமன் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் யாகூப் மேமன் தூக்கு உறுதி செய்யப்பட்டது.
யாகூப் மேமன் தற்போது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மகாராஷ்டிரா மாநில ஆளுநரிடம் யாகூப் மேமன், கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications