ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கு டிசம்பர் 4 ல் இடைத் தேர்தல்

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக இருந்த அதிமுக எம்எல்ஏ., பெருமாள் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். இதனையடுத்து தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2011 பொதுத்தேர்தலில் வாக்கு வித்தியாசம்
கடந்த 2011 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பெருமாள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வைச்சார்ந்த தமிழ்செல்வன் 66 ஆயிரத்து 639 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றிருந்தார். மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜாசெல்வம் 2 ஆயிரத்து 66 வாக்குகள் பெற்றிருந்தார்.
தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று இடத்தை தக்கவைக்குமா? அல்லது போட்டி பலமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டிசம்பர் 4ம் தேதியன்றுதான் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications