பாகிஸ்தானில் ஜெஇமு மீது இந்தியா தாக்கியது உண்மையா? பொய்யா? ஜெய்ஷ் - இ - முகம்மது பரபர பதில்!
பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மையா இல்லையா என்பது குறித்து தற்போது ஜெய்ஷ் - இ - முகம்மது இயக்கம் பரபரப்பு பதில் அளித்து இருக்கிறது.
Recommended Video

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மையா இல்லையா என்பது குறித்து தற்போது ஜெய்ஷ் - இ - முகம்மது இயக்கம் பரபரப்பு பதில் அளித்து இருக்கிறது.
பாகிஸ்தானில் கடந்த வாரம் உள்ளே புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 மிராஜ் 2000 விமானங்கள் பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியது.
இதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல் 300 பேர் இதில் பலியாகி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் என்ன
ஆனால் இதில் யாரும் பலியாகவில்லை. வெறும் மரம் மட்டுமே விழுந்தது. வெறும் இடத்தில் இந்தியா தனது குண்டுகளை போட்டு இருக்கிறது என்று பாகிஸ்தான் அரசு கூறியது. பாகிஸ்தானின் இந்த மறுப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான புகைப்பட ஆதாரங்களையும் பாகிஸ்தான் வெளியிட்டது.

வீடியோ வெளியானது
இந்த நிலையில் ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்று ஜெய்ஷ் முகமது அமைப்பின் முக்கியமான தலைவரும், தலைவர் மசூத் ஆசாரின் தம்பியுமான மவுலானா அமர் ஒப்புக்கொண்டுள்ளார். இவரின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அமர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளிடம் பேசுவது பதிவாகி உள்ளது.

என்ன கூறியுள்ளார்
அமர் அந்த வீடியோவில், இந்தியா நம்மை தாக்கி உள்ளது. நாம் போர் பயிற்சி எடுக்கும் இடத்தில் சரியாக தாக்கி இருக்கிறார்கள். அவர் நம் மீது போர் அறிவித்து இருக்கிறார்கள் இதன் மூலம். இதற்கு நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

காஷ்மீர் பகுதி
காஷ்மீர் போராளிகளுக்கு உதவுவதற்காக நாம் பயிற்சி எடுத்து வந்த இடம் அது. சரியாக அந்த இடத்தில் வந்து இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் மூலம் அவர்கள் நம்மை தாக்க தயாராகிவிட்டார்கள் என்றுதான் கூற வேண்டும், என்று அமர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications