ஆம் ஆத்மி கட்சி பதவியை ராஜினாமா செய்தார் யோகேந்திர யாதவ்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழு உறுப்பினராக இருக்கிறார் யோகேந்திர யாதவ். இதேபோல் ஹரியானா மாநில அமைப்பாளரான நவீன் ஜெய்ஹிந்த் தேசிய நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கிறார்.

இவர்கள் இருவரும் நேற்று கட்சி பொறுப்புகளில் இருந்து திடீரென ராஜினாமா செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டுமே விலகி இருக்கிறோம், கட்சியை விட்டு விலகவில்லை என்றனர்.
அதே நேரத்தில் இருவரது ராஜினாமாவையும் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications