கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு- அமித் ஷாவுடன் இணையும் யோகி ஆதித்யாநாத்!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி, பாஜக தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து கேரளா மாநிலத்தில் மக்கள் பாதுகாப்பு பேரணி என்ற தலைப்பில் அணிவகுப்பு நடத்த உள்ளனர்.
கண்ணூர்: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் கேரளாவில் நடக்கவிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று காலை அவர் கேரளா வந்தடைந்தார்.
இன்றிலிருந்து 7 நாட்கள் நடக்க இருக்கும் இப்பேரணிக்கு மக்கள் பாதுகாப்பு பேரணி என் பெயரிடப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூரின் பயனுரில் தொடங்கும் இப்பேரணி இம்மாதம் 17ம் தேதி திருவனத்தபுரத்தில் முடிவடையும்.

இன்று காலையில் தன்னுடைய 15 கிமீ நடை பயணத்தை தொடங்குவதற்கு முன் பேசிய யோகி ஆதித்யாநாத் , இனியொரு முறை கேரளாவில் அரசியல் சார்ந்த கொலை நடக்க விட மாட்டேன், எந்த ஒரு மரணம் ஆனாலும் அதை எதிர்த்து போரிடுவோம். இது ஆர்.எஸ்.எஸ்ன் வலிமையை காட்டும் பேரணி என்று கூறினார்.
பெரிய அளவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் பேரணியில் ஏற்கனவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இணைத்திருந்தார். கேரளாவில் பாஜகவின் வலிமையை காட்டும் விதத்திலும் இந்தப் பேரணி இருக்கப் போவதாகவும், இதுவரை இறந்த பிஜேபி உறுப்பினர்களின் மரணத்திற்கு தக்க பதிலாக இது இருக்கும் என்றும் ஏற்கனவே ராஜ்நாத் சிங் கூறி இருந்தார்.
மேலும் இப் பேரணியின் தொடக்கத்தில் பேசிய அமித் ஷா, கேரளத்தில் இதுவரை இறந்த 84 பாஜக கட்சிக்கார்களுக்கும் கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேரளா முதல்வருமே காரணம், அவர்கள் இதற்கு தக்க பதில் அளித்தாக வேண்டும் என்று கூறினார். இந்த மக்கள் பாதுகாப்பு பேரணியில் காலையில் சில அசம்பாவிதங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications