இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்.. அனுமதிக்க மத்திய அரசு திட்டம்
டெல்லி: நெடுஞ்சாலைகளில் இனிமேல் அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதியளிக்கப்போவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பொருளாதார மண்டலங்களை இணைக்கும் ஹை-வேக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் ஆங்காங்கு இணைப்பு சாலைகள் வராது. எனவே வேகமாக வாகனங்களை இயக்கும்போது, இடையூறுகள் ஏற்படாது. இதுபோன்ற சாலைகளில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படும்.
மும்பை-வதோதரா நடுவேயா சாலையில் முதல்கட்டமாக 2 வாரங்களில் இதுபோன்ற வேக விதிமுறை தளர்வு அறிமுகமாகும். டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-அமித்ரசரஸ் நடுவேயான சாலைகளிலும் இதுபோன்ற வேகக்கட்டுப்பாட்டு தளர்வு கொண்டுவரப்படும்.
இந்த சாலைகள் பிற நெடுஞ்சாலைகளைவிட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவை. இவ்வாறு கட்காரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications