For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா: இளம் பத்திரிகையாளர் அனுஸ்ரீ பிள்ளை திடீர் மரணம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொச்சி: கேரளாவை சேர்ந்த இளம் பத்திரிகையாளர் அனுஸ்ரீ பிள்ளை உடல் நலக் கோளாறு காரணமாக இன்று காலை திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவரது மரணம் கேரளாவில் உள்ள செய்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 31 வயதாகும் அனுஸ்ரீ பிள்ளை இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர், பல்வேறு பத்திரிகை நிறுவனங்களில் பணி புரிந்தவர்.

ஜெய்ஹிந்த், இந்தியா விஷன் நிறுவனங்களில் பணியாற்றிய அனுஸ்ரீ கைரளி தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை குழுமத்தின் இணையதள செய்தி பிரிவான சமயம் மலையாளத்தில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.

Young Kerala journalist Anusree Pillai dies

நேற்றிரவு அனுஸ்ரீக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக பத்தனந்திட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிலைகுலைந்து மயக்க நிலைக்கு வந்த அவரை உயிருக்கு போராடிய நிலையில், கொழஞ்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அந்த மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அனுஸ்ரீயின் உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், அனுஸ்ரீயின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Kerala journalist Anusree Pillai dies

மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே அனுஸ்ரீ மரணமடைந்து விட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் தான் உறுதியான தகவல்களை கூற முடியும் என கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அனுஸ்ரீயின் மரணம் கேரளாவில் உள்ள செய்தியாளர்களையும் ஊடகத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

English summary
A young Keralite journalist Anusree Pillai has died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X