22 வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்த ஏழு பேர்
டெல்லி: 22 வயது பெண்மணி 7 பேரால் கூட்டு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் குர்கானில் நடந்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் குர்கானில் வசித்து வருகிறார். அதே நகரை சேர்ந்த கபில் என்பவருடன் இவருக்கு பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று கபிலை, லோக்கல் மார்க்கெட் ஒன்றில் அப்பெண் சந்தித்துள்ளார். இதன்பிறகு கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் கபில் மற்றும் 6 பேர் அப்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் போலீசாரிடம் நேற்று, அளித்துள்ள புகார்: சம்பவத்தன்று, மார்க்கெட்டில் நான் கபிலை பார்த்த பிறகு, இருவரும் கெஸ்ட் ஹவுஸ் சென்றோம். அங்கு மறைந்திருந்த கபிலின் 6 நண்பர்கள், கபிலோடு சேர்ந்து என்னை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதைவரை யாரும் கைது செய்யப்படவில்லை.