ஜோரா, உனது கண்ணீர் இதயத்தை குத்திக் கிழிக்கிறது...!
ஜம்மு- காஷ்மீரில் காவலர் ஒருவர் தீவிரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணமடைந்ததால் அவரது மகளுக்கு ஆறுதலாக கடிதம் காவல் துறை சார்பில் டிஐஜி கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video

ஜம்மு: தீவிரவாத தாக்குதலில் காவல் துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்ததால் அந்த இழப்பை தாள முடியாமல் அவரது மகள் அழுத காட்சி அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது என்று காஷ்மீர் டிஐஜி ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். அந்த சிறுமிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைத் தொடர்ந்து அங்கு திங்கள்கிழமை போலீஸ் படை வேட்டையில் இறங்கியது. இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
தீவிரவாதிகள் மறைந்திருந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸாரும் சுட்டனர். இந்தத் தாக்குதலில் போலீஸ் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது.

போலீஸ்காரர் பலி
காவல்துறை உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தார். இது துயரச் சம்பவம் ரஷீத்தின் ஜோரா உலுக்கி விட்டது. தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அவர் அழுத அழுகை அனைவரையும் நிலை குலைய வைத்து விட்டது.

நெஞ்சையே உலுக்கியது
தந்தையின் உடலை பார்த்து அவர் அழுதது போலீஸாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆறுதல் கூறினாலும் புரியாத வயதில் உள்ள அந்த பிஞ்சு குழந்தையை தேற்றுவதற்காக டிஐஜி ஒருவர் ஆறுதல் கடிதம் எழுதி அதை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அன்புக்குரிய ஜோரா
அந்த கடிதத்தில், என் அன்புக்குரிய ஜோரா, உனது தந்தையின் உயிர் தியாகம் காலத்துக்கு நிலைத்திருக்கும். இது ஏன் நடந்தது என்று புரிந்து கொள்ள நீ மிகவும் சிறிய வயது குழந்தை. உன் தந்தையின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மனிதகுலத்தின் எதிரிகள்.

சமூகத்தை பாதுகாக்க...
உன் தந்தையும் நாங்களும் வீரம் மற்றும் தியாகத்தின் சின்னங்கள். சமூகத்தை பாதுகாக்க எங்களை போன்ற காவலர்கள் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டும், மீள முடியாத அதிர்ச்சியிலும் உள்ளனர். இவையெல்லாம் உண்மையில் எங்களை பெருமைப்படுத்தும் வகையில் நல்லதொரு சரித்திரத்தை உருவாக்கும்.

மறக்க முடியாது
நம்முடன் பணியாற்றியவர்கள், நமக்கு கதாநாயகனாக தெரிந்தவர்களை நம்மால் மறக்க இயலாது. இந்த மோசமான நிலையில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை நினைவில் வைத்துக் கொள். உன்னுடைய ஒவ்வொரு துளி கண்ணீரும் எங்கள் மனதில் வலியை ஏற்படுத்துகிறது. இதயத்தை நொறுக்குகிறது.

உறுதிமொழி முக்கியம்
இந்த சமூகத்தை காக்க சேவையாற்றுவது என்ற எங்கள் நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் வலிமையை வழங்க வேண்டும். இந்த காவலர் சீருடையை நாங்கள் அணிந்த போது நாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி மிகவும் உன்னதமானது.

நினைவலைகள்
எங்கள் ஆன்மாவும் அர்ப்பணிப்பும் மாற்றத்தின் தூண்டுகோலாக இருக்கட்டும். இது அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான கருத்தாக அமையட்டும். உண்மையான காவலராக நாட்டுக்கு தியாக செய்த உன் தந்தையின் நினைவுகள் எங்களுடன் எப்போதும் இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஏராளமான வாழ்த்துகளுடன், ஜம்மு காஷ்மீர் காவல் துறை என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications