இளம்பெண்ணை சீண்டிய வாலிபருக்கு ஊர் மக்கள் கொடுத்த 'உவ்வே' தண்டனை! தப்பு செய்ய இனி மனசு வராதுல்ல
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவரை அடித்து உதைத்து அவரை மனித மலத்தை உண்ண வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கிய கிராம மக்கள் அவரை மனிதக் கழிவையும் கட்டாயப்படுத்தி உண்ண வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவபுரி மாவட்டத்தில் உள்ள வினேகா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.

மேலும் அவரை மனிதக் கழிவையும் கட்டாயப்படுத்தி உண்ண வைத்தனர். இத்துடன் இந்த சம்பவத்தை அந்த குடும்பத்தினர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர். தகவலறிந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அந்த இளம்பெண்ணும், தானும் காதலித்து வந்ததாகவும், இது பெண் வீட்டாருக்கு பிடிக்காததால் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க அவர்கள் திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று அந்தப் பெண்தான் தம்மை தோட்டத்திற்கு அழைத்ததாகவும், அப்போது பெண்ணின் சகோதரன் இருவரையும் பார்த்துவிட்டு அவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததன் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவமானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications