For Daily Alerts
Just In
செல்போன் அடாப்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்து டீ கடைக்காரர் பரிதாப சாவு!
பெங்களூரு: போன் அடாப்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து, வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு ஹெச்.ஏ.எல் காவல் சரகத்திற்கு உட்பட்ட முனேனகொலலு பகுதியில் வசித்தவர் பிரதீப் (23). டீ கடை வைத்து நடத்தி வந்தார். இவர் சம்பவத்தன்று, அடாப்டர், மூலம், தனது செல்போனுக்கு சார்ஜ் போட முற்பட்டுள்ளார். ஆனால் அது ரிப்பேராக இருந்ததால் சார்ஜ் ஏறவில்லை. எனவே, மின் இணைப்பை கொடுத்துக் கொண்டே, அடாப்டரை ரிப்பேர் செய்ய முயன்றுள்ளார் பிரதீப்.
அப்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
Comments
English summary
A 23-year-old tea stall owner was killed due to electrocution at his house in Munenakolalu in HAL on Friday.
Story first published: Sunday, February 1, 2015, 12:20 [IST]