சாக்லேட் கொடுப்பதாக ஏமாற்றி 9 வயது சிறுமியை சீரழித்து அலமாரியில் வைத்து பூட்டிய வாலிபர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் 26 வயது வாலிபர் ஒருவர் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தனது அறையில் உள்ள அலமாரியில் வைத்து பூட்டிவிட்டார்.

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள குத்புல்லாபூரைச் சேர்ந்தவர் பப்லு(26). மெக்கானிக். அவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் சாக்லேட் கொடுப்பதாகக் கூறி நேற்று மாலை அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை அலமாரியில் வைத்துவிட்டு அறைக் கதவை பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில் சிறுமியை காணாமல் அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடினர். அவர்களுக்கு பப்லு மீது சந்தேகம் வந்து அவர் தங்கியிருக்கும் அறைக்கு சென்றபோது கதவு பூட்டியிருந்தது. உடனே அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று தேடியபோது சிறுமி அலமாரியில் வைத்து பூட்டப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் பாட்டி போலீசில் இது குறித்து புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பப்லுவை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+