காங்கிரசுக்கு எதிரான மோடியின் முகமூடி சு. சுவாமி.. பங்களா ஒதுக்கியதற்காக காங்கிரஸ் பாய்ச்சல்
டெல்லி: காங்கிரசுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு போட்டதற்காகவே முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு பங்களாவும், இசெட் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி, குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் சதி திட்டம் பாஜகவிடம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்ட் வழக்கில், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி சிக்கியுள்ளனர். இந்நிலையில், காங்கிரசார் கோபம் பாஜக மீதும் சுப்பிரமணியன் சுவாமி மீதும் திரும்பியுள்ளது.

டெல்லியில் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: எங்களுக்கு நீதியில் நம்பிக்கையுள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் நேஷனல் ஹெரால்ட் வழக்கில், நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
அதேநேரம், எம்.பியாகவோ அல்லது வேறு எந்த பதவியிலும் இல்லாத சுப்பிரமணியன் சுவாமிக்கு, தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி மத்திய அரசு இசெட் பிளஸ் பாதுகாப்பை தொடரச் செய்துள்ளதோடு, அரசு பங்களாவையும் வழங்கியுள்ளது. இது தேவையற்ற செயல்.
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்ததற்கு பரிசாகவே பங்களா கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையை மோடி குறி வைக்கிறார். மோடி கூறியபடியே சுப்பிரமணியன் சுவாமி நடந்துகொண்டிருப்பது உறுதியாகிறது. மோடியின் முகமூடி சு.சுவாமி. இருப்பினும், எங்களை மவுனிக்க செய்ய முடியாது.
காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்று பாஜக கோஷத்தை முன்வைத்தது. தற்போது, எதிர்க்கட்சி இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்று அந்த கோஷம் விரிவடைந்திருக்கிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குறி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். மக்களவை எதிர்க்கட்சி குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அப்போது உடனிருந்தார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், சுப்பிரமணியன் சுவாமிக்கு, இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!











Click it and Unblock the Notifications