ஜீ நியூஸ் எக்ஸிட் போல்: கோவாவில் பாஜக- காங் இடையே நெக் டூ நெக் போட்டி.. தொங்கு சட்டசபை?
கோவா: கோவாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நெக் டூ நெக் போட்டி இருக்கும் என்றும் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் ஜீ நியூஸ் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. அது போல் உள்ளூர் கட்சியான மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றது. இந்த மாநில சட்டசபையின் பெரும்பான்மை பலம் 21 ஆகும்.
இந்த நிலையில் வெறும் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக , அங்கிருக்கும் உள்ளூர் கட்சிகள், சுயேச்சைகளின் துணை கொண்டு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது.

மனோகர் பாரிக்கர்
மனோகர் பாரிக்கர் கடந்த 2019ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கோவா சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

40 சட்டசபை தொகுதிகள்
மொத்தம் 40 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த கோவாவில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடியது. இந்த நிலையில் பல நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.

ஜீ நியூஸ் எக்ஸிட்
அதில் ஜீ நியூஸ் எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக 13-18 இடங்களிலும் காங்கிரஸ் 14-19 இடங்களிலும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 2-5 இடங்களிலும் ஆம் ஆத்மி 1-3 இடங்களிலும் இதர கட்சிகள் 1-3 இடங்களிலும் வெல்லும் என கணித்துள்ளது. கோவாவில் காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி நிலவுவது போல் தெரிகிறது.

தொங்கு சட்டசபை?
மேலும் கோவாவில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாத நிலை ஏற்பட்டு தொங்கு சட்டசபை ஏற்படுவது போல் தெரிகிறது. இந்த மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸும் கோலோச்ச முயற்சித்தது. ஆனால் அது கட்சிக்கு கோவாவில் ஆதரவு இல்லாத நிலையே தெரிகிறது.












Click it and Unblock the Notifications