மிசோரத்தில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி.. ஆட்சியை பிடித்த எதிர்க்கட்சி! புதிய முதல்வர் யார் தெரியுமா
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், இதில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி கிடைத்துள்ளது. அங்கே எதிர்க்கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மிசோரம் தவிர மற்ற மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த நிலையில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வென்றது.

மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் மிசோரம் மாநிலத்தில் இழுபறி இருப்பது போன்ற நிலை காணப்பட்டது. ஆனால், அதன் பிறகு டிரெண்ட் மொத்தமாக மாறியது.
மிசோரம்: அங்கே மிசோரத்தில் ஆளும் கட்சியாக இருந்த மிசோ தேசிய முன்னணிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறக் குறைந்தது 21 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு வெறும் 10 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
அதேநேரம் அங்கே எதிர்க்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கத்திற்கு அங்கே ஆதரவு வேற லெவலில் இருக்கிறது. அங்கே மொத்தம் 40 இடங்களிலும் அக்கட்சி போட்டியிட்ட நிலையில் அதில் 27 இடங்களை ஜோரம் மக்கள் இயக்கத்திற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் மிசோரம் மாநிலத்தில் முதல்முறையாக ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது.
காங்கிரஸ் அதிர்ச்சி: இதில் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் மிசோரத்தில் கடந்த 2018 வரை காங்கிரஸ் தான் ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் அவர்களால் ஒரே ஒரு இடத்தை தான் கைப்பற்ற முடிந்துள்ளது. மிசோரத்தில் வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்காத பாஜக கூட அங்கே இரண்டு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் மிசோரத்தில் காங்கிரஸ் முழுமையாகத் தனது இருப்பை இழந்துவிட்டது.
புதிய முதல்வர்: மாநில கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வென்று முதல்முறையாக ஆட்சியை அமைக்க உள்ளது. மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி லால்துஹோமா பதவியேற்க உள்ளார். 73 வயதான இவர், செர்ச்சிப் தொகுதியில் போட்டியிட்ட 2,982 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாகக் காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி மட்டுமே மாறி மாறி ஆட்சியில் இருந்த நிலையில், அதை மாற்றி ஜோரம் மக்கள் இயக்கம் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications