மிசோரத்தில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி.. ஆட்சியை பிடித்த எதிர்க்கட்சி! புதிய முதல்வர் யார் தெரியுமா
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், இதில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி கிடைத்துள்ளது. அங்கே எதிர்க்கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மிசோரம் தவிர மற்ற மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த நிலையில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வென்றது.

மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் மிசோரம் மாநிலத்தில் இழுபறி இருப்பது போன்ற நிலை காணப்பட்டது. ஆனால், அதன் பிறகு டிரெண்ட் மொத்தமாக மாறியது.
மிசோரம்: அங்கே மிசோரத்தில் ஆளும் கட்சியாக இருந்த மிசோ தேசிய முன்னணிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறக் குறைந்தது 21 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு வெறும் 10 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
அதேநேரம் அங்கே எதிர்க்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கத்திற்கு அங்கே ஆதரவு வேற லெவலில் இருக்கிறது. அங்கே மொத்தம் 40 இடங்களிலும் அக்கட்சி போட்டியிட்ட நிலையில் அதில் 27 இடங்களை ஜோரம் மக்கள் இயக்கத்திற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் மிசோரம் மாநிலத்தில் முதல்முறையாக ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது.
காங்கிரஸ் அதிர்ச்சி: இதில் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் மிசோரத்தில் கடந்த 2018 வரை காங்கிரஸ் தான் ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் அவர்களால் ஒரே ஒரு இடத்தை தான் கைப்பற்ற முடிந்துள்ளது. மிசோரத்தில் வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்காத பாஜக கூட அங்கே இரண்டு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் மிசோரத்தில் காங்கிரஸ் முழுமையாகத் தனது இருப்பை இழந்துவிட்டது.
புதிய முதல்வர்: மாநில கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வென்று முதல்முறையாக ஆட்சியை அமைக்க உள்ளது. மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி லால்துஹோமா பதவியேற்க உள்ளார். 73 வயதான இவர், செர்ச்சிப் தொகுதியில் போட்டியிட்ட 2,982 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாகக் காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி மட்டுமே மாறி மாறி ஆட்சியில் இருந்த நிலையில், அதை மாற்றி ஜோரம் மக்கள் இயக்கம் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications