தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான 1.6 லட்சம் கணக்குகள் நீக்கம்.. டுவிட்டர் நிறுவனம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சான் பிரான்சிஸ்கோ: தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான 1.6 லட்சம் கணக்குகளை 6 மாதங்களில் நீக்கியிருப்பதாக டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

இதில் பெரும்பாலான கணக்குகள் ஆரம்ப நிலையிலேயே, அதாவது முதல் ட்விட்டை பதிவு செய்வதற்கு முன்பே நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 86 நாடுகளின் அரசுகளிடமிருந்து வந்த தகவல்களின் அடிப்படையில், 1,66 ,513 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது

1.6 lakhs accounts removed for encourages terrorism.. Twitter information

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் கொள்கை மற்றும் சட்ட பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா கட்டே, 2018 ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட கணக்குகளை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அதிகபட்சமாக அமெரிக்கா தீவிரவாதம் மற்றும் அதனை ஊக்குவிக்கும் டுவிட்டர் கணக்குகள் பற்றி கேட்டு 30% கோரிக்கைகள் அனுப்பியதாக தகவல்தெரிவித்தார். ஜப்பான் 24%, ஐரோப்பா 13%, இந்தியா 6%, ஜெர்மனி 6%, பிரான்ஸ் 5% இது மாதிரியான கோரிக்கைகளை தங்கள் நிறுவனத்திற்கு அனுப்பியிருந்ததாக விஜயா கட்டே கூறினார்.

மேலும் சில சர்வதேச சட்ட அமைப்புக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வாசகங்களை நீக்கும்படி 8% கோரிக்கைகளை அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+