For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனா பட்டாசு ஆலையில் பயங்கர தீ; 10 பேர் பலி: 7 பேர் படுகாயம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

பீய்ஜிங்: சீனாவில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன நாட்டின் ஹீணன் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

10 dead in China fireworks plant blast

படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

முதல்கட்ட தகவல்படி 5 பேர் உயிரிழந்ததாகவும், சட்டவிரோதமான வெடிபொருட்களை தயாரிக்கும் ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
At least 10 people were killed and seven others injured following an explosion at a fireworks plant in China's
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X