துபாய் சாலை விபத்தில் பீகாரைச் சேர்ந்த 10 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலியாகியுள்ளனர். பலியான இந்தியர்களில் பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் ஜெபல் அலி பகுதியில் வேலை செய்யும் 27 வெல்டிங் பணி செய்யும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

10 Indians among 15 Asian workers killed in Dubai road accident

எப்போதும் வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் எமிரேட்ஸ் சாலையில் பேருந்து வேமாக சென்றது. அப்போது அந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக பேருந்து மோதியது. பேருந்து மோதியதும் வழுக்கி 5 மீட்டர் தொலைவிற்கு சென்றது.

இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். உடனடியாக மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

விபத்தில் பலியானவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்த இந்திய மற்றும் வங்காளதேச தொழிலாளர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுதான் இந்த ஆண்டின் மிக பெரிய விபத்து என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+