மாயமில்ல.. மந்திரமில்ல.. 1000 வயதான கோழி முட்டை.. உடையாத அதிசயம்.. வியப்பை தந்த கண்டுபிடிப்பு..!
ஆயிரம் வருட கோழிமுட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ரோம்: 1000 வருஷங்களுக்கு முந்தைய ஒரு கோழி முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது இன்னமும் உடையாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.
இஸ்ரேலின் மத்திய பகுதியில் யவ்னே என்ற நகர் உள்ளது.. இங்கு நீண்ட நாட்களாகவே அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.. வேறு எதையோ கண்டுபிடித்து கொண்டிருக்கும்போதுதான், ஒரு சாக்கடையில் வெள்ளையாக உருண்டையாக ஒன்று கிடப்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.
பிறகுதான் அது கோழி முட்டை என்றே தெரியவந்தது.. இந்த முட்டையின் ஓட்டை வைத்து அது எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை கண்டறிந்தனர் ஆய்வாளர்கள்.. அப்போதுதான் அந்த முட்டைக்கு வயசு 1000 ஆகிறது என்பதும் தெரியவந்தது..

ஆச்சரியம்
இந்த முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசலும் ஏற்பட்டிருக்கிறதாம். கிட்டத்தட்ட 1,000 வருஷங்கள் ஆகியும் அந்த முட்டை இன்னமும் உடையாமல் இருப்பதை பார்த்து அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டு போய்விட்டனர்.. இந்த கோழி முட்டை தங்களுக்கு ஒரு அரிதான கண்டுபிடிப்பு என்றும் பெருமிதம் கொள்கின்றனர்.

துண்டுகள்
இதை பற்றி அவர்கள் சொல்லும்போது, "முந்தைய காலங்களில் டோவிட், சிசோரியா மற்றும் அப்போலினயா போன்ற நகரங்களில் முட்டை துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன... ஆனால் முட்டைகளின் உடையக்கூடிய தன்மை காரணமாக, உலக அளவில் கூட எந்த கோழி முட்டைகளும் இதுவரை பாதுகாக்கப்படவில்லை.. அப்படி இருக்கும்போது, தங்களுக்கு இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பு" என்கின்றனர்.

பொம்மை
இந்த கழிவுநீர் தொட்டியிலிருந்து முட்டையுடன், சேர்த்து சில பழங்கால பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் லீ பெர்ரி சொல்லும்போது, "தென்கிழக்கு ஆசியாவில் 6,000 வருஷங்களுக்கு முன்பு கோழிகள் வளர்க்கப்பட்டன.. ஆனால் அவைகளை மனிதர்கள் வெகு காலம் கழித்துதான் உணவில் சேர்த்து கொண்டனர்.

பூங்கா
அதுவரை, சேவல் சண்டை போன்ற பிற காரணங்களுக்காகவே இந்த கோழிகளை பயன்படுத்தி கொண்டிருந்தனர். ஆனால், அழகான விலங்குகளாக இந்த கோழிகள் கருதப்பட்டன,.. பண்டைய உயிரியல் பூங்காக்களில் காட்சிக்காக இந்த கோழிகள் வைக்கப்பட்டிருந்தன.. பிறகு அவைகளை மன்னர்களுக்கு பரிசு பொருட்களாக தரப்பட்டுவிட்டன" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications