ஏமெனில் சரக்கு கப்பல் மூழ்கியது- 12 இந்திய மாலுமிகள் மாயம்!
Subscribe to Oneindia Tamil
ஏடன்: ஏமென் கடற் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 12 இந்திய மாலுமிகள் மாயமாகியுள்ளனர்.
ஏமனின் ஹத்ராமவுட்டில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் செகிர் என்ற கடற்கரை நகரில் மூக்கியுள்ளது. இந்த கப்பல் அந்நாட்டு தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமானது.
ஹத்ராமவுட் கடல் பகுதியில் பொருட்களை ஏற்ற சென்ற போது கப்பல் எதிர்பாராத விதமாக மூழ்கிவிட்டது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதில் 12 மாலுமிகளும் மாயமாகியுள்ளனர்.
இந்திய மாலுமிகளை தேட மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடற்படையையும் உதவிக்கு அழைத்துள்ளோம் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications