Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாட்டரியில் விழுந்த ரூ.125 கோடி.. அதிஷ்டக்காற்று வீசியும் வீணாப்போச்சு.. பரிசு வென்ற நபர் மாயமான மர்மம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: லாட்டரியில் ஆயிரம் ரூபாய் அடித்தாலே யாருக்கும் விட மனம் வராது. பரிசு விழுந்தது என்று தெரிந்த ஓரிரு நாட்களில் ஓடிப்போய் பரிசை வாங்கி விடுவார்கள். ஆனால், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ.125 கோடி என்ற பெரும் தொகை பரிசாக வென்ற நபர், மாயமாகியிருப்பதால் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த சுவாரசிய நிகழ்வு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

லாட்டரியில் யாருக்கு எப்போது பரிசு அடிக்கும் என்று தெரியாது. டிக்கெட் வாங்க கூட காசு இல்லாதவர்களுக்கு கூட, தனி விமானம் வாங்கும் அளவிற்கு ஒரே நாளில் திருப்பம் ஏற்பட்டு விடும். ஆனால் ஒரு சிலருக்கு இப்படி கோடிகள் விழுந்தாலும், கோடிக்கணக்கான பேருக்கு கொடுத்த பணம் கூட திரும்பி வராது.

125-crore-lottery-winner-goes-missing-in-australia-before-claiming-prize

ரூ.125 கோடி பரிசு

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் இருப்பது போல, பல்வேறு நாடுகளிலும் லாட்டரிகள் உள்ளன. வெளிநாடுகளில் பல நூறு கோடிகள் முதல் பரிசாக கிடைக்கும் என்பதால், சர்வதேச அளவில் கவனம் பெறும் நிகழ்வாக உள்ளது.

சரி, அதெல்லாம் இருக்கட்டும். இங்கே விஷயத்திற்கு வருவோம்... ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான சாகாஸ் லாட்டரியில் 15 மில்லியன் டாலர் பரிசாக ஒருவருக்கு விழுந்தது. ஆனால் பரிசு அடித்ததில் இருந்து அந்த நபர் தலைமறைவு ஆகிவிட்டாராம். இந்திய மதிப்பில் ₹125 கோடி பரிசு விழுந்த நபர் திடீரென மர்மமான முறையில் மாயமாகியிருப்பது, ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புகொள்ள முடியவில்லை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஈஸ்ட் மெய்ட்லாண்டில் உள்ள ஸ்டாக்லாண்ட் ஷாப்பிங் சென்டரில் உள்ள கிரீன்ஹில்ஸ் நியூஸ் ஏஜென்சியில் இருந்து இந்த லாட்டரி டிக்கெட் வாங்கப்பட்டது. வெற்றி எண்கள் 44, 46, 39, 34, 7, 15 மற்றும் 3 ஆகவும், துணை எண்கள் 24, 19, 13 ஆகும். ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ லாட்டரிகளை நடத்தும் 'தி லாட்' நிறுவனத்தின் அதிகாரிகள், இந்த டிக்கெட் 'தி லாட் உறுப்பினர்கள் கிளப்பில்' பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால், வெற்றி பெற்றவரை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆச்சரியமாக இருக்கிறது

கிரீன்ஹில்ஸ் நியூஸ் ஏஜென்சியின் ஊழியர் டியெர்னா பெர்ரி இது தொடர்பாக கூறுகையில், "இதுவரை நாங்கள் விற்றதிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான். இதை விட அதிகமான பரிசுத்தொகை இதற்கு முன்பு யாரும் வென்றதில்லை. அந்த நபர் விரைவில் தனக்கு $15 மில்லியன் கிடைத்திருப்பதை உணருவார் என நம்புகிறோம்" என்று கூறினார்.

'தி லாட்' நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் காட் மெக்கின்டைர் கூறும் போது, இந்த நிலைமை தங்களை வியப்பில் ஆழ்த்தியதாக தெரிவித்தார். "ஒருவர் $15 மில்லியன் பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஈஸ்ட் மெய்ட்லாண்டில் டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் எண்களை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அவர் வலியுறுத்தினார்.

இது முதல் முறையல்ல

வெற்றி பெற்ற டிக்கெட்டை வாங்கியவரை அடையாளம் காண, அதிகாரிகள் கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். டிக்கெட் தொலைந்து போயிருந்தால் கூட, நியூ சவுத் வேல்ஸ் லாட்டரி சட்டங்களின்படி, வெற்றியாளர் ஆறு ஆண்டுகளுக்குள் பரிசை உரிமை கோரலாம்.

இந்த பரிசு உரிமைகோராமல் இருந்தால், அந்தப் பணம் மாநில கருவூலத்திற்குத் திரும்பிச் சென்றுவிடும். இத்தகைய பெரிய பரிசுகள் உரிமைகோராமல் இருப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜூன் 2025 இல், ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய பவர்பால் ஜாக்பாட் பரிசான $100 மில்லியனும் உரிமைகோராமல் இருந்தது. 'தி லாட்' நிறுவனத்தின் மூத்த அதிகாரி மேட் ஹார்ட், இவ்வளவு பெரிய பரிசுகள் உரிமை கோராமல் போவது மிகவும் அரிது என்று குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+