அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 11பேர் காயம்
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு காயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் சிகாகோவில் நடந்துள்ளது.
சிகாகோ நகரத்திலுள்ள ஒரு பூங்காவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு காயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதிக்கு 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன. அப்பகுதிக்கு சீல் வைத்து, காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications