13 வயது கொலையாளிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை: பாக். கோர்ட் அதிரடி உத்தரவு
இஸ்லாமாபாத்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன் ஒருவனுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.
பாகிஸ்தான், லாகூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது குர்ஜன்வாலா பகுதி. சமீபத்தில் அங்கு நடைபெற்ற சண்டை ஒன்றில் ஒரு நபரை ஹபிஸ் கியாஸ் என்பவர் கொல்ல முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம், வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக குர்ஜன்வாலா மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஹபிஸை பாதிக்கப்பட்ட நபரின் 13வயது மகன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
அதனைத் தொடர்ந்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு விசாரணை அதே குர்ஜன்வாலா மாவட்டத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிறுவன் கோஹர் நவாசுக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
சிறுவன் ஒருவனுக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications