15 அறிவிப்பும் பக்கா.. ஓமனில் வேலை செய்றவங்கலாம் கொடுத்து வெச்சவங்க -தொழிலாளர்களுக்கு இவ்ளோ சலுகையா?
மஸ்கட்: ஏராளமான தமிழர்கள் பணிபுரிந்து வரும் வளைகுடா நாடான ஓமனில் நடைமுறையில் இருந்து வரும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கு சாதகமாக பல்வேறு அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் 15 முக்கிய சட்டங்கள் என்னவென்று பார்ப்போம்.
1. முதலாவதாக ஓமன் நாட்டில் உள்ள நிறுவனங்களில் உள்நாட்டு குடிமக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

2. நிறுவனத்தில் பணிபுரியும் ஓமன் மக்களின் எண்ணிக்கையை இணையத்தில் வெளியிட வேண்டும். ஓமன் தொழிலாளர்கள் எண்ணிக்கை, ஊதியம் உள்ளிட்ட தகவல்கள் அதில் இடம்பெற்று இருக்கு வேண்டும். காலிப் பணியிடங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
3. உயர் பதவிகளில் ஓமன் நாட்டவர்களே அமர்த்தப்பட வேண்டும். உயர் பொறுப்புகளை கையாள்வதற்கு தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.
4. பெண் தொழிலாளர்களுக்கு குழந்தை பராமரிப்புக்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கலாம். 98 நாட்கள் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பும், குழந்தை பராமரிப்புக்காக ஓராண்டு வரை ஊதியம் இல்லாத விடுப்பையும் எடுக்கலாம்.
5. மனைவிக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் ஆண்களுக்கு ஏழு நாள் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதி. குடும்பத்தில் நோயாளிகள் யாரேனும் இருந்தால் அவர்களை பராமரிக்க 15 நாட்கள் விடுப்பு எடுக்க முடியும். அதேபோல் மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
6. 25 க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் இருந்தால் அவர்களுக்கென தனி ஓய்வு இடத்தை ஒதுக்க வேண்டும்.
7. பகுதி நேர வேலைகள், பிரீலான்ஸ் பணிகளை மேற்கொள்ள செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
8. எதிர்பார்த்த அளவுக்கு ஒரு தொழிலாளி வேலை செய்யாவிட்டால் அவர்களை வேலையில் இருந்து நீக்க முதலாளிக்கு சட்டம் அனுமதியளித்து உள்ளது. ஆனால், எந்த இடத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை சொல்லி 6 மாத காலம் அவருக்கு அவகாசம் வழங்கலாம். வேலையையிலிருந்து நீக்கப்பட்ட 30 நாட்களுக்குள் புகாரளிக்கலாம். வெளிநாட்டு தொழிலாளர்கள்
9. ஓமன் நாட்டினருக்கான இடங்களை நிரப்பாமல் வெளிநாட்டினரை பணி அமர்த்தினால், அவர்களை நீக்க சட்டம் அனுமதி அளித்து உள்ளது.
10. தொழிலாளர்களின் திறன், செயல்பாடுகளை மதிப்பிட, செயல்திறன் மதிப்பீட்டு முறையை அமைக்க வேண்டும்.
11. தொழிலாளி கோரிக்கை விடுத்தால் ஊதியம் இல்லாமல் சிறப்பு விடுப்பு வழங்கலாம். 6 மாதம் வேலை செய்தபின் குறைந்தபட்சம் 30 நாட்கள் வருடாந்திர விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
12. சரியான காரணங்களுடன் இரவு நேரங்களில் பணிபுரிய முடியாது என்பதை நிரூபித்தால் பகலில் பணிபுரிய அனுமதிக்கலாம். ஓய்வு நேரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தினமும் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
14. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது. அவர்களுக்கு முறையான வேலையை ஒதுக்கீடு செய்திட வேண்டும். பணியின் தன்மைக்கு ஏற்ப அதை பிரித்து கொடுக்க வேண்டும்.
15. வெளிநாட்டு தொழிலாளர்கள் விடுமுறை முடிந்து சொந்த நாட்டில் இருந்து திரும்பி வருவதற்கான விமான டிக்கெட் செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும். பணி சார்ந்த விடுமுறைகளின்போது விமான டிக்கெட் செலவை நிறுவனங்களே ஏற்க வேண்டும்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications