சீனாவில் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல்... 15 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவின் பதட்டத்துக்குரிய ஜின்ஜியாங் மாகாணத்தில் நடந்த அதிரடியான தீவிரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தாக்குதல் நடந்த இடத்தில் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
ஜின்ஜியாங் மாகாணத்தின் ஷாசே கவுன்டி என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வாகனங்களில் வந்த தீவிரவாதிகள், கத்திகள், வெடிகுண்டுகளை வைத்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும், கண்ணில் பட்டவர்களை சரமாரியாக தாக்கியதாகவும் டியான்ஷான் என்ற செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் நெரிசல் மிக்க தெருவில் இந்த சம்பவம் நடந்தது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கடந்த ஜூலை மாதமும் இதேபோல ஷாசே பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது நினைவிருக்கலாம். அப்போது நடந்த தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூலை மாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 12 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தாக்குதல் நடந்த பகுதியானது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீருக்கு அருகே உள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானும் அருகாமையில் உள்ளது.
ஜின்ஜியாங் மாகாணத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லீ்ம்கள் வசித்து வருகிறார்கள். கடந்த பல வருடமாகவே உய்குர் முஸ்லீம்கள், சீனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். உள்ளூர் மக்களுக்கும் ஹான் சீன மக்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இது வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறைக்கு அல் கொய்தா ஆதரவைப் பெற்ற கிழக்கு துர்க்மேனிஸ்தான் இஸ்லாமிய அமைப்பு போராளிகள்தான் காரணம் என்று சீனா குற்றம் சாட்டுகிறது. இவர்கள்தான் உய்குர் முஸ்லீம்களைத் தூண்டி விடுவதாகவும் அது கூறுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications