பிரான்சில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்- இதுவரையில் 16 பேர் பரிதாப பலி
பாரிஸ்: ஐரோப்பாவின் பிரான்சில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் சில நாட்களாக பயங்கர சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதில் கடலோர நகரமான கோட் டிஅசூர் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இங்குள்ள பிரேக் நதியில் பெருகிய காட்டாற்று வெள்ளம் திடீரென்று கரையை உடைத்துக் கொண்டு அருகே உள்ள ஆன்டிப்ஸ் நகருக்குள் புகுந்தது. இதில் ஏராளமான வீடுகள் மூழ்கின.

வெள்ளத்தில் மூழ்கிய முதியோர் இல்லம் ஒன்றில் மூத்த குடிமக்கள் மூன்று பேர் தப்பிக்க வழியின்றி பரிதாபமாக உயரிழந்தனர். குகைப் பாதை ஒன்றில் திடீரென புகுந்த வெள்ளத்தில் கார் மூழ்கியதில் அதில் இருந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
உலக திரைப்பட விழா நடைபெறும் கேன்ஸ் நகரமும் வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கியது. இங்கு பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சூறாவளியால் பல இடங்களில் மரங்கள் வேரோடு மண்ணில் சாய்ந்தன. தொலை தொடர்பு கோபுரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.
இதனால் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நைஸ் விமான நிலையத்தில் ஐநுாறுக்கும் அதிகமான வெளிநாட்டு பயணிகள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அந்த நகரில் நடைபெறவிருந்த முக்கிய கால்பந்து போட்டியும் வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த இயற்கை சீற்றத்திற்கு 16 பேர் பலியாகியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications