நேபாளத்தில் மீண்டும் 2 “ஆப்டர்ஷாக்”.. நிலநடுக்க பலி எண்ணிக்கை 8,000 ஆக உயர்ந்தது
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ஏற்கனவே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில் இந்த நில அதிர்வால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதற்கிடையே, இது வரை நிலநடுத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அண்மையில் நேபாளத்தில் ரிக்டர் அளவில் 7.9 என்ற அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த நாடே சின்னாபின்னமானது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதன் காரணமாக வீடுகளை இழந்த பல மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை மத்திய நேபாளில் லேசான நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் உணரப்பட்டது. இன்று அதிகாலை 2.19 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4 ஆக பதிவானது.
இதைத் தொடர்ந்து 6.17 மணியளவில் ஏற்பட்ட மற்றொரு நில அதிர்வு ரிக்டரில் 5 ஆகவும் பதிவானது. இந்த நில அதிர்வால் எந்த சேதமும் ஏற்படவில்லை. கடந்த ஏப்ரல் 25 நிலநடுக்கத்துக்கு பிறக்கு 150 முறைக்கும் மேலாக பின் அதிர்வுகள் அங்கு உணரப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications