மாலியில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 20 இந்தியர்களும் மீட்பு: வெளியுறவுத் துறை தகவல்
பமாகோ: மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள ராடிசன் ப்ளு ஹோட்டலில் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக் கைதிகளாக இருந்த 20 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மாலி நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அரசிடம் பணம்கேட்டு மிரட்டியும் வருகின்றது. பணம் தராவிட்டால் பிடித்து வைத்திருக்கும் மக்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாலி தலைநகர் பமாகோவில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலுக்குள் திடீரென புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும், ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள், ஊழியர்கள் என 170 பேரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அந்த ஹோட்டலில் 20 இந்தியர்கள் தங்கியிருந்தனர். இதையடுத்து தகவல் அறிந்த ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
பதிலுக்கு உள்ளே இருக்கும் தீவிரவாதிகளும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அந்த ஹோட்டல் இருக்கும் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காணப்படுகிறது. பிணைக்கைதிகளில் 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதையடுத்து, சிறப்பு படையினர் ஹோட்டலுக்குள் நுழைந்து கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மாலி ராணுவத்திற்கு உதவும் விதமாக பிரான்ஸ் ராணுவமும் அந்த ஹோட்டலை சுற்றி வளைத்துள்ளது. உள்ளே நுழைந்த சிறப்பு படையினர் 80 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த இந்தியர்கள் 20 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர் என்று மாலியில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது என வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டவர்களுடன் அங்குள்ள இந்திய தூதர் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த மர்ம நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications