For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடரும் பதட்டம் - மீண்டும் 20 பெண்களை கடத்திய போக்கோஹரம் தீவிரவாதிகள்

Google Oneindia Tamil News

மைடுகுரி: நைஜீரியாவில் மீண்டும் போக்கோஹரம் தீவிரவாதிகள் 20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திய சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரத்தில் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தி சென்றது போக்கோஹரம் தீவிரவாதிகள் என சந்திக்கப்படுகின்றது. ஏற்கனவே இத்தீவிரவாதிகளால் 300 பள்ளிச்சிறுமிகள் மற்றும் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போக்கோஹரம் தீவிரவாத குழுக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அல்ஹாடர் என்ற நபர் கூறுகையில், கடந்த வியாழனன்று மதியம் துப்பாக்கியுடன் அங்கு வந்த நபர் ஒருவர், பெண்களை அவர்கள் வந்த வாகனத்தில் மிரட்டி ஏற்றிச்சென்றதாக கூறினார்.

அம்மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகவும் விளங்கும் மறைவிடத்திற்கு அப்பெண்களை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.

இந்த கடத்தலை தடுக்க முயன்ற இரண்டு வாலிபர்களையும் தீவிரவாதிகள் கைது செய்து அழைத்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார். கடத்தில் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்றதாகவும் அதற்கு முன்பே இந்த இடங்களை காலி செய்துவிட்டு தீவிரவாதிகள் சென்றுவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

English summary
nmen abducted 20 women from a remote settlement in northeastern Nigeria as 272 schoolgirls kidnapped by the terrorist group Boko Haram continued to languish in captivity, according to news reports Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X