மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. இரு அமெரிக்க ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு! இவர்கள் சாதித்தது என்ன?
ஸ்டாக்ஹோம்: நடப்பு ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த இரு ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் தான் இந்தாண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் மற்ற பிரிவுகளிலும் யாருக்கு நோபல் பரிசு என்பது தெரிய வரும்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். அந்த துறைகளில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்தோருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படும்.

நோபல் பரிசு: இந்த நோபல் பரிசுகள் துறை ரீதியாக வழங்கப்படும். முதலில் எப்போதும் மருத்துவத்திற்கான நோபல் பரிசே வழங்கப்படும். அதன்படி இப்போது 2024ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நோபல் பரிசுடன் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரௌன்ஸ் பரிசுத் தொகையாக வழங்கப்படும். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள தேர்வுக் குழு இந்த விருது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதற்காக: இந்த இரு அமெரிக்க ஆய்வாளர்கள் மைக்ரோஆர்என்ஏவைக் கண்டுபிடித்ததற்காகவும், டிரான்ஸ்கிரிப்ஷனலுக்குப் பிறகு (post-transcriptional) மரபணு ஒழுங்குமுறையில் இந்த மைக்ரோ ஆர்என்ஏ எந்தளவுக்கு உதவுகிறது என்பதையே இவர்கள் கண்டுபிடித்தனர்.
அதாவது நமது குரோமோசோம்களில் உள்ள தகவல்கள் தான், நமது செல்கள் அனைத்திற்கும் ஒரு கையேடாக (instruction manual) செயல்படுகிறது. ஒருவர் உடலில் இருக்கும் அனைத்து செல்களும் ஒரே மரபணுக்களைக் கொண்டிருந்தாலும், தசை & நரம்பு போல சில வகை செல்களுக்கு மட்டும் தனித்துவமான பண்புகள் இருக்கும். இது ஜீன் ரெகுலேஷன் மூலம் நடக்கிறது. ஒவ்வொரு செல்லும் தனக்குத் தேவையான மரபணுக்களை மட்டுமே செயல்படுத்துகிறது.
ஜீன் ரெகுலேஷன்: இதை வைத்து எப்படி பல வகையான செல்கள் உருவாகிறது என்பதில் இருவருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய தீவிர ஆய்வில் தான மைக்ரோ ஆர்என்ஏக்களை கண்டுபிடித்தனர். மரபணுவை ஒழுங்கு முறைப்படுத்துவதில் இந்த ஆர்என்ஏ முக்கிய பங்கு வகிக்கிறது.. அவர்களின் கண்டுபிடிப்பு தான் முன்பு கூறிய ஜீன் ரெகுலேஷன் குறித்து நாம் தெரிந்து கொள்ள உதவியது.

டைனமைட்டை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 1901ஆம் ஆண்டு முதல் அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகியவற்றிற்றுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1968 முதல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய விஞ்ஞானி கடலின் கரிகோ அமெரிக்க சக ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.. கொரோனாவை கட்டுப்படுத்த தங்கள் கண்டுபிடிப்பு மூலம் உதவியதற்காகக் கடந்தாண்டு இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications