நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 22 “பைலட்” திமிங்கலங்கள் பரிதாப பலி!

Subscribe to Oneindia Tamil

வெல்லிங்டன்: நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 22 பைலட் ரக திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்கு செல்ல இயலாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பினை ஏற்படுத்தியது.

ஓஹிவா துறைமுக பகுதியில் கரை ஒதுங்கிய சுமார் 21 திமிங்கலங்களை மீட்பு பணியாளர்கள் மீண்டும் கடலுக்குள் கொண்டு விட்டனர்.

ஆனால், கடலின் ஆழத்திற்கு திமிங்கலங்களால் செல்ல முடியாததால் அவை கூட்டத்தோடு பலியாகியுள்ளன.

58 திமிங்கலங்கள் உயிரிழப்பு:

இதனால் கடந்த செவ்வாய்கிழமையில் இருந்து கரை ஒதுங்கி பலியான திமிங்கலங்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

வீணாகிப் போன நம்பிக்கை:

கரை ஒதுங்கும் திமிங்கலங்களை மீட்கும் தன்னார்வ குழுவை சேர்ந்த டாரென் க்ரோவர் இது குறித்து தெரிவிக்கையில், "மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட திமிங்கலங்கள் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றுவிடும் என்ற எங்களின் நம்பிக்கை வீணாகிவிட்டது.

வருத்தமான முடிவு:

இது கடலுக்குள் திமிங்கலங்களை வெற்றிகரமாக அனுப்பியதற்கு கிடைத்துள்ள வருத்தமான முடிவு.

இயற்கை மாறினால் வேதனைதான்:

அழகான இந்த திமிங்கலங்கள் அவற்றின் இயற்கையான சூழலில் இருந்து வெளியே வந்த பிறகு ஒவ்வொரு நிமிடமும் அவற்றிற்கு வேதனையாக இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்" எனக் கூறியுள்ளார்.

விஞ்ஞானிகளுக்கே காரணம் தெரியவில்லை:

நியூசிலாந்தில் கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழப்பது வழக்கமாகியுள்ள நிலையில், இதற்கான சரியான காரணம் குறித்து தெளிவான புரிதல் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+